<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<rss version="2.0" xmlns:blogChannel="http://backend.userland.com/blogChannelModule"> 
	<channel> 
		<title>Lankasri Swiss News RSS Feeds - Latest News</title>
		<link>http://swiss.lankasri.com/</link>
		<description>10 Latest news</description>
		<language>ta</language>
		<copyright>Copyright(c) 2005-13 Lankasri Swiss News</copyright>
		<pubDate>Fri, 24 May 2013 21:26:34 GMT</pubDate>
		<lastBuildDate>Fri, 24 May 2013 21:26:34 GMT</lastBuildDate>
		<webMaster>india@lankasri.com</webMaster>
		<image> 
			<title>Lankasri Swiss News</title>
			<url>http://swiss.lankasri.com/zpimages/rss_world.png</url>
			<link>http://swiss.lankasri.com/</link>
			<width>152</width>
			<height>54</height>
			<description>10 Latest news</description>
		</image>
		<item> 
	<title>சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிற்கூடங்களில் வரிமோசடி</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://swiss.lankasri.com/view.php?224Old0bcaa0Qd4e2eMM302cBnB3ddeZBnV303eWAA2e4W0asacb2lO442</link>		<description>பாலியல் தொழில் சட்டமயமாக்கப்பட்டு வருமானவரி வசூலிக்கப்படும் சுவிட்சர்லாந்தில் இத்தொழில் பலவகையிலும் நடைபெற்று வரும் செக்ஸ் பார்லர்களில் வரி மோசடி நடப்பதால் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.</description>&lt;p&gt;&lt;P&gt;ஹங்கேரியைச் சேர்ந்த ஒருவர், ஜெனீவாவில் எட்டு இடங்களில் சலூன் பார்லர் வில்லா என்ற நவீன பெயர்களில் பாலியல் தொழிற்கூடங்கள் நடத்தி வருகிறார். இவற்றில் தனது நாட்டுப் பெண்கள் 70 பேரை பாலியல் தொழிலாளிகளாக அமர்த்தியிருக்கிறார். &lt;/P&gt;
&lt;P&gt;இவர் பல மில்லியன் ஃபிராங்க் வரி செலுத்தாமல் மோசடி செய்திருப்பதாக சந்தேகப்பட்ட அரசு அதிகாரிகள் இந்த இடங்களில் சோதனை நடத்தினர். &lt;/P&gt;
&lt;P&gt;பெர்ன் மற்றும் ஜெனீவாவைச் சேர்ந்த வருமானவரி அதிகாரிகளும், ஜெனீவா மாநிலப் பொலிஸ் படைகளும் இணைந்து இந்த அதிரடிச் சோதனையை நடத்தினர். &lt;/P&gt;
&lt;P&gt;மாநில மற்றும் மத்தியக் கூட்டரசு அதிகாரிகள் கூட்டாக அங்கு நடத்திய சோதனையில் ஏராளமானவற்றை கைப்பற்றினர். மேலும் பல விசாரணைகளும் நடந்து வருகின்றனர். &lt;/P&gt;
&lt;P&gt;இந்த விடுதிகளோடு தொடர்புடைய அமெரிக்காவைச் சேர்ந்த அல் கபோன்(Al Capone) என்பவையும் அதிகாரிகள் விசாரித்ததாக ஊடகத்தகவல் தெரிவித்துள்ளது. &lt;/P&gt;
&lt;P&gt;மேலும் இங்கு பணிபுரியும் ஹங்கேரிப்பெண்களுக்கான பணிச்சூழல் மோசமாக இருப்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Fri, 24 May 2013 14:34:59</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/sex_swiss_over_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>மலைப்பகுதியில் விடுமுறை இல்லங்கள் கட்ட நீதிமன்றம் தடை</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://swiss.lankasri.com/view.php?224Old0bc0a0Qd4e2eMM302cBnB3ddeZBnV303eWAA2e4W0asacb2lO442</link>		<description>சுவிட்சர்லாந்தில் மலைப்பகுதிகளில் விடுமுறை விடுதிகளும், இரண்டாம் இல்லங்களும் கட்டுவது அதிகரித்து வருவதால் இதன் மூலம் சுற்றுச் சூழலுக்குக் கேடு உண்டாகும் என்று ஃபிரான்ஸ் வெபர்(Franz Weber) தெரிவித்துள்ளார்.</description>&lt;p&gt;&lt;P&gt;இவர் முயற்சியில் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதியன்று மக்களிடையே இது குறித்து பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் மக்கள் இந்தச் சுற்றுச்சூழல் கேட்டைத் தடுக்கும்படி வாக்களித்திருந்தனர்.&lt;/P&gt;
&lt;P&gt;இந்த பொதுவாக்கெடுப்பின் எதிரொலியாக உச்சநீதிமன்றம், மலைப்பகுதியில் வீடு மற்றும் விடுதிகள் கட்டுவதற்குத் தடை விதித்தது. &lt;/P&gt;
&lt;P&gt;ஆனால் கிராபூண்டென், வலாய்ஸ் மற்றும் பெர்ன் மாநிலங்களில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதிக்கு பின்னர் அந்த ஆண்டின் இறுதி வரை சிலர் விடுமுறை விடுதிகள் கட்ட அனுமதி வாங்கியிருந்தனர். &lt;/P&gt;
&lt;P&gt;ஏறத்தாழ 2000 கட்டிடங்களுக்கு இந்தக் கால கட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக வெபர் கூறினார். ஆனால் வீட்டுமனைத் தொழில் செய்வோரும், கட்டிட ஒப்பந்தகாரர்களும் நீதிமன்றத்தின் இந்தப் புதிய தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். &lt;/P&gt;
&lt;P&gt;இதனால் அவற்றை எதிர்த்து சுற்றுப்புறச் சூழல் அமைப்பான ஹெல்வேஷியா நோஸ்த்ரா(Helvetia Nostra) நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுக்களை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. &lt;/P&gt;
&lt;P&gt;இந்த புதிய சட்டம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்ததாக ஏற்றுக் கொள்ளப்படுவதால் இந்தத் திகதிக்குப் பின்னர் அனுமதிகள் பெற்ற கட்டிடங்கள் தானாகவே ரத்தாகிவிடும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Fri, 24 May 2013 14:12:33</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/aeroplane_court_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சுவிஸ் வங்கிகளில் சர்வாதிகாரர்களின் முதலீட்டை முடக்க புதிய சட்டம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://swiss.lankasri.com/view.php?224Old0bcQa0Qd4e2eMM302cBnB2ddeZBnV303eWAA2e4W0asacb2lO442</link>		<description>சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில், பல நாட்டு சர்வாதிகாரர்கள் அந்தந்த நாட்டின் வருமானத்தை தனது பெயரில் முதலீடு செய்து முடக்கியுள்ளனர்.</description>&lt;p&gt;&lt;P&gt;இனி அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தைச் சந்திக்கவும், அவர்களின் சர்வாதிகாரம் ஒடுக்கப்பட்டு புதிய தலைமை பொறுப்பேற்ற பின்னர் நாட்டுக்கு நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற பணம் தேவைப்படும் போது சர்வாதிகாரர்கள் பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகள் அந்நாட்டு அரசுக்கு திரும்ப கொடுத்து உதவவுள்ளது. &lt;/P&gt;
&lt;P&gt;இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற புதன் கிழமையன்று இந்த மசோதாவின் மீதான விவாதங்கள் நடைபெறும். &lt;/P&gt;
&lt;P&gt;அப்பொழுது இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் பிலிப்பைன்ஸின் ஃபெர்டினான்டு மார்கோஸ், நைஜீரியாவின் சானி அபாச்சா, பெருவின் விளாடிமீர் மாண்ட்டொலி னோஸ் போன்றோர் தமது நாடுகளில் இருந்து கையாடிய பணத்தை சுவிஸ் வங்கிகளிலேயே நிறுத்தி வைக்கப்படும். &lt;/P&gt;
&lt;P&gt;கடந்த 2011ம் ஆண்டு தொடக்கத்தில் அரேபியா எழுச்சி தோன்றிய போது டுனீஷியாவிலிருந்து பதவியிறக்கப்பட்ட சர்வாதிகாரியான சினே ஏல் அபிடினே பேன் அலி மற்றும் எகிப்தி ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கின் வங்கியிருப்பு முடக்கப்பட்டது. &lt;/P&gt;
&lt;P&gt;லிபியாவுக்குரிய 100 மில்லியன் சுவிஸ் ஃபிராங்கும், சிரியாவுக்குரிய 100 மில்லியன் சுவிஸ் ஃபிராங்கும் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளன. &lt;/P&gt;
&lt;P&gt;புதிய தலைவர்கள் பொறுப்பேற்கும் போது அவர்களிடம் சுவிஸ் வங்கிகள் முதலீட்டு விவரங்கள் ஒப்படைக்கும். முடக்கப்பட்ட முதலீடு பற்றிய விவரத்தை வங்கிகள் உடனடியாக வெளியுறுவுத்துறைக்கு அளிக்க வேண்டும். &lt;/P&gt;
&lt;P&gt;முதலீட்டுக்குரிய அரசு நாடு, கேட்டவுடன் அந்தப் பணம் அவர்களுக்கு உடனே திருப்பித் தரப்படும்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Fri, 24 May 2013 09:08:07</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/bern_city_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://swiss.lankasri.com/view.php?224Old0bcGa0Qd4e2eMM302cBnB2ddeZBnV302eWAA2e4W0asacb2lOU42</link>		<description>சுவிட்சர்லாந்தில் தற்பொழுது வசந்தகாலம் நிலவி வருகின்ற வேளையில் அடுத்த சில நாட்களில் பல இடங்களில் பனி கொட்டத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையமான மீட்டியோ சுவிஸ்(MeteoSwiss) அறிவித்துள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;வானிலை குறித்து மீட்டியோ வெளியிட்ட அறிக்கையில், நாளை 600 மீற்றர் உயரம் உள்ள இடங்களில் கூட பனிப்பொழிவு தொடங்கும். ஆல்ப்ஸ் மலைகளில் குளிர் 0 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். &lt;/P&gt;
&lt;P&gt;கிராபுண்டென் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் பனி கொட்ட தொடங்கியுள்ளது. கடந்த புதன் இரவு முதல் சான் பெர்னாடினோ கனவாய் வழியாகச் செல்லும் சாலையை கடும்பனி மூடியுள்ளது. இதனால் வண்டி வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. &lt;/P&gt;
&lt;P&gt;சமேதான் பகுதியில் நாளை கடும் பனிப்பொழிவு காணப்படும். யூரி மாநிலத்தில் உள்ள ஆண்டர்மாட்டில் 2 டிகிரி வெப்பம் மட்டுமே நிலவும். மேலும் வலாய்ஸ் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஜெர்மாட்டிலும் பனிப்பொழிவு அதிகரிக்கும். &lt;/P&gt;
&lt;P&gt;எனினும் வருகின்ற திங்கட்கிழமை நாடு முழுக்க வெப்பத்தை எதிர்பார்க்கலாம் என்றும் ஜெனீவா, லூகானோ போன்ற ஊர்களில் 18 டிகிரி வரை வெப்பம் நிலவும் எனவும் அறிவித்துள்ளது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 14:31:27</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/switerland_wet_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://swiss.lankasri.com/view.php?22cQ0aUc203VnBZb4e2cUOl7acb2eWAA0dde4eMMC0bcedlO42e4dnBnB4203dsa0W42</link>		<description>சுவிட்சர்லாந்திலுள்ள நெஸ்ட்லே நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக சுமார் நான்கு மில்லியன் ஃபிராங்கை ஒதுக்கியுள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;ஆசிய பசிபிக் பகுதிகளில் விரைந்து வளர்ந்து வருகின்ற சந்தையில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் நெஸ்ட்லே இந்தப் பணிகளை விரிவாக்கியுள்ளது. &lt;/P&gt;
&lt;P&gt;சிங்கப்பூரில் உருவாகும் இதன் பணிக்காக 17 நாடுகளில் இருந்து இயந்திரப் பொறியியல், நுண்ணுயிரியல் போன்ற துறைகள் சார்ந்த நிபுணர்களை நெஸ்ட்லே அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். &lt;/P&gt;
&lt;P&gt;நெஸ்கஃபே காபித்தூள் மற்றும் மைலோ பால்பவுடர் போன்றவற்றை உலக அளவில் விற்பதற்காக இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவை விரிவாக்கவுள்ளது. &lt;/P&gt;
&lt;P&gt;இப்பிரிவின் தலைவர் ஜோஹான்ஸ் பேஞ்ச்(Johannes Baensch) வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சத்துக்களுடன் கூடிய புதிய ஆரோக்கியமான உணவுப் பொருளைக் கண்டுபிடிக்க இந்தப் பிரிவு முனைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். &lt;/P&gt;
&lt;P&gt;மேலும் புதிய முறையில் தயாரிக்கப்படும் இந்த உணவுப் பொருளில் இனிப்பு, உப்பு, கொழுப்பு ஆகியவை குறைவாகப் பயன்படுத்தப்படும். ஆனால் நல்ல சுவையுடன் தயாரிக்கப்படும். இச்சுவை உள்ளூர்ச் சுவையுடன் ஒத்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். &lt;/P&gt;
&lt;P&gt;நெஸ்ட்லே கடந்த 1980ம் ஆண்டு ஆசியாவில் முதன்முதலாக சிங்கப்பூரில் தான் தனது கிளையைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 14:08:11</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/nestle_invests_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://swiss.lankasri.com/view.php?224Old0bcYa0Qd4e2eMM302cBnB3ddeZBnV302eWAA2e4M0asacb2lOU42</link>		<description>சுவிட்சர்லாந்திலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜேக்கப் கெல்லென்பெர்கெர்(Jakob Kellenberger) என்பவர் தற்பொழுது சுவிஸ் பீஸ்(Swiss Peace) அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</description>&lt;p&gt;&lt;P&gt;உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்ட உருவான இந்த ஆராய்ச்சி நிலையம், மக்கள் பின்பற்றக்கூடிய நடைமுறைக்கு இசைந்த தீர்வுகளை பரிந்துரைக்கின்றது. கெல்லென்பெர்கெர் இந்த சமூகநல அமைப்பை இன்னும் மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. &lt;/P&gt;
&lt;P&gt;தொடக்கத்தில் கெல்லென்பெர்கெர் சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். அதன் பின்னர் கடந்த 2000ம் ஆண்டு முதல் பன்னிரெண்டு ஆண்டுகள் வரை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.&lt;/P&gt;
&lt;P&gt;செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஸ்பெயினில் உள்ள சலாமன்கா பல்கலைக்கழகத்திலும், ஜுரிச்சில் உள்ள மத்தியத் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றினார். &lt;/P&gt;
&lt;P&gt;இந்த சுவிஸ் பீஸ் அறக்கட்டளை கடந்த 1988ம் ஆண்டில் தோன்றியது. இதில் 50 பேர் பணியாற்றுகின்றனர். இந்த அமைப்பு தற்பொழுது பேசெல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Thu, 23 May 2013 08:45:00</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/former_red_cross_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://swiss.lankasri.com/view.php?224Old0bcOa0Qd4e2eMM302cBnB3ddeZBnV302eWAA2e4M0asacb2lOK42</link>		<description>சுவிட்சர்லாந்திலுள்ள ரிச்மாண்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரியான மார்ட்டி விக்ஸ்ட்ரோம்(Marty Wikstrom) என்பவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் தான் வகித்து வந்த தலைமை பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.</description>&lt;p&gt;&lt;P&gt;இவருக்கு அடுத்த இந்தப் பதவிக்கு வருபவர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. வருகின்ற செப்டம்பர் 12ம் திகதி அன்று நடக்கவிருக்கும் அடுத்த பொதுக்குழு வரை இவர் பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. &lt;/P&gt;
&lt;P&gt;ரிச்மாண்டின் பெரும்பகுதி விற்பனை அதன் நகை மற்றும் கடிகாரப் பிரிவில் தான் நடக்கிறது என்றாலும் ஆல்ஃபிரட் டன்ஹில், அஸெடீன் அலய்யா, லான்செல் மற்றும் க்ளோயி போன்ற நவநாகரீக தோல் பொருட்களின் தயாரிப்பு விற்பனையும் இந்நிறுவனத்துடன் இணைந்துள்ளது. &lt;/P&gt;
&lt;P&gt;இந்தத் தோல் பொருட்பிரிவு 2012 - 2013க்கான நிதியாண்டில் இலாபத்தைப் பெறவில்லை என்பதை நிறுவனத்தின் ஆண்டறிக்கை தெளிவுப்படுத்துகிறது. &lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில் இந்நிறுவனம் உடனே தனது முதலீட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இலாபத்தைப் பெருக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜான் காக்ஸ்(Jon Cox) என்ற ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். &lt;/P&gt;
&lt;P&gt;எனவே இலாபம் தராத தயாரிப்புகளை விரைவில் விற்றுத் தீர்க்கவும், இலாபம் தரக்கூடியவற்றைப் பெருக்கவும் ரிச்மாண்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 16:15:17</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/richmont_brands_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://swiss.lankasri.com/view.php?224Old0bcEa0Qd4e2eMM302cBnB3ddeZBnV302eWAA2e4M0asacb2lOK42</link>		<description>சுவிட்சர்லாந்தில் மத்தியக் கூட்டரசின் பொது சுகாதாரத்துறை ஆணையின்படி சோஷியல் இன்சைட்ஸ் என்ற ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், குடிப்பழக்கமே குடும்ப வன்முறைக்கு முக்கிய காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;இந்த ஆய்வை டேனியலா குளூர்(Daniela Gloor) மற்றும் ஹேனா மேயர்(Hanna Meier) ஆகிய இருவரும் நடத்தினர். வன்முறைக்கு உள்ளான பெண்களில் பாதிப்பேர் கணவனின் குடிப்பழக்கமே அதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். &lt;/P&gt;
&lt;P&gt;கடந்த 2002ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பும் இக்கருத்தை வலியுறுத்தி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட 4.3 சதவீத குடும்பங்களில் கணவன், மனைவி என இரண்டு பேரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். &lt;/P&gt;
&lt;P&gt;0.6 சதவீத குடும்பங்களில் பெண்கள் மட்டும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி குடும்ப வன்முறைக்குக் காரணமாகின்றனர் என்பதை 1500 அறிவுரை மையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்றது. &lt;/P&gt;
&lt;P&gt;குடிப்பழக்கத்தால் உருவாகும் குடும்ப வன்முறையை தீர்க்க இதுவரை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தது. தற்பொழுது பேசெல் மற்றும் செயிண்ட் கேலனில் இதற்கான அறிவுறுத்தல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.&lt;/P&gt;
&lt;P&gt;சுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பங்கு ஆண்கள் அளவுக்கதிகமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 15:05:52</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/harmful_family_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://swiss.lankasri.com/view.php?224Old0bcua0Qd4e2eMM302cBnB3ddeZBnV302eWAA2e4M0asacb2lOK42</link>		<description>சுவிட்சர்லாந்திலுள்ள லூசெர்ன் மாநிலத்தில் ஜாகுவார்(Jaguar) என்ற கார் சாலையோரத்திலிருந்த ஒரு வீட்டின் சுவர் மீது மோதி அதன் அருகில் நடந்து கொண்டிருந்த வயதான பெண்ணை இடித்துத் தள்ளியது.</description>&lt;p&gt;&lt;P&gt;இதில் அந்த மூதாட்டி படுகாயமுற்று சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். காரை ஓட்டி வந்தவர் எழுபது வயது நிரம்பிய ஒரு முதியவர் ஆவார். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை&lt;/P&gt;
&lt;P&gt;இவர் சாலையில் சிவப்பு விளக்கு எரிவதைக் கண்டதும் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் பச்சை விளக்கு எரிந்ததும் ஆக்ஸ்லேட்டரை வேகமாக மிதித்து காரை எடுத்ததினால் கார் அதிவேகத்தில் பறந்து விபத்தை ஏற்படுத்தியது. &lt;/P&gt;
&lt;P&gt;காருக்கும், வீட்டின் சுவருக்கும் ஏற்பட்ட சேதம் சுமார் ஐம்பாதயிரம் பிராங்க் என்று மதிப்பிடப்படுகின்றது. &lt;/P&gt;
&lt;P&gt;செயிண்ட் பவுல் தேவாலயத்துக்கு அருகில் உள்ள நடைபாதையில் இந்த விபத்து நடைபெற்றதால் பவுலோஸ்பிளாட்ஸ் சதுக்கத்தைச் சுற்றி சுமார் இரண்டு மணிநேரமாக போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 08:34:42</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/04/luser_swiss_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://swiss.lankasri.com/view.php?224Old0bcka0Qd4e2eMM302cBnB3ddeZBnV302eWAA2e4M0asacb2lOA42</link>		<description>சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகரில் சிறைக்கைதியால் கடத்தப்பட்டுக் கொலைச் செய்த இளம் பெண்ணுக்காக சுமார் 250 பேர் திரண்டு வெள்ளை உடை அணிந்து நீதி கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</description>&lt;p&gt;&lt;P&gt;கிளாட் டுபாய்ஸ்(Claude Dubois) என்ற சிறைக் கைதி கடத்தல், கற்பழிப்பு மற்றும் காதலியைக் கொலை செய்ததற்காக இருபதாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருந்தார். &lt;/P&gt;
&lt;P&gt;பயங்கரமான கொடியவர் என்பதால் அவரது காலில் பொலிசார் மின்னணு கருவியைப் பொருத்தி வீட்டுச் சிறையில் வைத்திருந்தனர். &lt;/P&gt;
&lt;P&gt;ஆனால் அவர் அதனை அகற்றி விட்டு அங்கிருந்து தப்பி சென்று, வாட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு, தன்னை முழுமையாக விடுவிக்கும்படி பொலிசாரை மிரட்டி வந்துள்ளார். &lt;/P&gt;
&lt;P&gt;தீவிரமாக தேடி வந்த பொலிசார் அவரை கடந்த செவ்வாயன்று மடக்கி பிடித்து திரும்பவும் சிறையில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் தான் தெரிந்தது அந்தப் பெண் இவரால் கொலைச் செய்யப்பட்டார் என்கின்ற தகவல். &lt;/P&gt;
&lt;P&gt;இத்தகவலை அறிந்து மக்கள், அந்த அப்பாவி இளம்பெண்ணுக்காக நீதி கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 14:42:14</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/marchers_protest_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item>
	</channel>
</rss>