சுவிட்சர்லாந்தில் போலி மருந்துப் பொருட்களின் இறக்குமதி வெகுவாக உயர்வடைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.சட்டவிரோத மருந்துப் பொருட்களின் இறக்குமதி 75 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இது ஓர் ஆபத்தான நிலைமை என சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலியான வயகரா மாத்திரைகள் போன்றவை அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதல் ஆறு மாத காலப்பகுதியில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்கு இடமான மருந்துப் பொருள் இறக்குமதிகள் தொடர்பில் 992 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
2009ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சட்டவிரோதப் போலி மருந்துப் பொருள் இறக்குமதியின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்வடைந்துள்ளது.
போலி மருந்துப் பொருட்களின் மூலம் உலக அளவில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறைந்த பட்சம் வருடமொன்றில் 50,000 போலி மருந்துப் பொருட்களேனும் நாட்டுக்குள் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை குறித்து சுவிஸ் சுங்கப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
விலை குறைந்த பொருட்களை சந்தையில் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிலர் இவ்வாறான மருந்துப் பொருட்களை நாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு
|