சுவிட்சர்லாந்து வர்த்தகரான மெக்ஸ் கோல்டிக்கு லிபிய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்காக கோல்டிக்கு ஆயிரம் தினார் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோல்டி லிபிய வர்த்தகச் சட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தண்டனையை சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்டனை குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏனைய சுவிஸ் பிரஜையான ராச்சீட் ஹம்டானிக்கும் இதேவிதமான தண்டனை விதிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய தினம் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெக்ஸ் கோல்டி மற்றும் ராச்சீட் ஹம்டானி ஆகிய சுவிட்சர்லாந்து வர்த்தகர்கள் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் லிபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இரண்டு வர்த்தகர்களுக்கும் ஏற்கனவே வீஸா சட்டங்களை மீறிய குற்றத்திற்காக 16 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தண்டனை தொடர்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டில் ஒன்று நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய மேன்முறையீடு எதிர்வரும் 11ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு |